மனிதக் கழிவில் இயங்கும் சொகுசுப் பேருந்து!!

290

Bus

பிரித்தானியாவில் மனிதக் கழிவுகளால் இயக்கப்பட்டும் முதல் பேருந்து அறிமுகப்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பிரிஸ்டோல் நகரைச் சேர்ந்த ஜெனிக்கோ (Geneco) என்ற நிறுவனம் 40 பயணிகள் செல்லக்கூடிய மனித கழிவுகளால் இயங்க கூடிய முதல் பேருந்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த பேருந்துகளில் இருந்து வெளிவரும் புகைகள் டிசல் மற்றும் பெட்ரோல் வாகனத்தை விட மிகவும் சிறிது என்றும் மனித கழிவுகளால் வரும் வாயுவை வைத்து இயங்ககூடிய இந்த பேருந்து 186 மைல்கள் வரும் செல்லக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெனிக்கோ நிறுவனத்தின் மேலாளர் முகமது சாதிக் (Mohammed Saddiq) கூறுகையில், மாசற்ற இந்த பேருந்து பிரித்தானியாவில் தூய்மையான காற்றை பரவச் செய்யும் என கூறியுள்ளார்.

மேலும் 5 மனிதர்களால் ஒரு வருடத்திற்கு உருவாக்கப்படும் கழிவை வைத்து இந்த பேருந்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 27ம் திகதி முதல் பாத் (Bath) பகுதியிலிருந்து பிரிஸ்டோல் (Bristol) விமான நிலையம் வரை இந்த பேருந்து செல்லும் என சாதிக் தெரிவித்துள்ளார்.