வெள்ளை நிறத்தில் கன்று ஈன்ற எருமை மாடு!!

922

cow

ஈரோடு அருகே விவசாயி ஒருவரது எருமை வெள்ளை நிறத்தில் கன்றுக்குட்டியை ஈன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் பூசாரி தோட்டத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (65). விவசாயியான இவர், 20 எருமைகளும் 4 பசு மாடுகளும் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் வளர்த்த எருமை ஒன்று, நேற்று ஈன்ற கன்று பசு மாட்டுக் கன்றுபோல் வெண்மையாக பிறந்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் வாழும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.