பொலிவுட்டில் களமிறங்கிய ஸ்ரீசாந்த்!!

442

sreesanth

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், ‘கேபரே’ என்ற இந்திப் படத்தில் நடிக்கவுள்ளார்.

இவர் கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இதனால், ராஜஸ்தான் றொயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்துக்கு, கிரிக்கெட் விளையாட ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இவர் ‘கேபரே’ என்ற இந்திப் படம் ஒன்றில் அறிமுகமாகிறார். இப்படத்தில் மலையாள அறிவுரையாளர் கதாபாத்திரத்தில் ஸ்ரீசாந்த் நடிக்கிறார். கேபரே நடனம் குறித்த படமாகும்.

ஏற்கனவே, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரமாதமாக நடனம் ஆடியதாக பாராட்டுகளைப் பெற்றவர் ஸ்ரீசாந்த். தற்போது நடனத்தோடு, நடிப்பாற்றலும் இருப்பதாலேயே ஸ்ரீசாந்த், நடிக்க ஒப்புக் கொண்டதாக இப்படத்தின் தயாரிப்பாளர் பூஜாபட் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமாவில் அவர் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.