கோடிக்கு ஏலம் போன ஹிட்லரின் அழகிய ஓவியம்!!

336

அடல்ப் ஹிட்லர் வரைந்த ஓவியம் ஒன்று ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அவர் தனது இளமை காலத்தில் பல ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

அந்த ஓவியங்களை வியன்னா ஓவிய கல்லூரியில் ஹிட்லர் விற்பனைக்கு கொடுத் தபோது, அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். இதில் சில ஓவியங்களை அவரது தாத்தா கடந்த 1916ம் ஆண்டு விலைக்கு வாங்கினார்.

இதன்பின் ஹிட்லரின் ஓவியங்களை அவரது 2 சகோதரிகள் பொதுமக்களிடம் விற்றுள்ளனர். இந்நிலையில் நேற்று ஜேர்மனின் பிராங்க்பர்ட்டில்(Frankfurt) உள்ள நியூரம்பர்க்(Nuremberg) நகரில், ஹிட்லரின் நீர்வண்ண ஓவியங்கள், வீட்லர் (Weidler) என்ற ஏல நிறுவனத்தால் ஏலத்துக்கு விடப்பட்டன.

அப்போது அவரது பெரும்பாலான ஓவியங்களை பொதுமக்கள் விரும்பி ஏலத்தில் வாங்கியுள்ளனர். அதில் மூனிச் (Munich) நகரின் பழைமையான மண்டப நீர்வண்ண ஓவியத்தை, நபர் ஒருவர், ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கி சென்றுள்ளார்.

hitler_paintings hitler_paintings1