லெபனான் நாட்டில் நபர் ஒருவர் தனது தாயின் பிணத்துடன் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் காட்டுத் தீயை போல் உலகெங்கும் பரவிய இந்த செல்பி மோகம், சில நேரங்களில் வீபரித செயல்களிலும் மக்களை ஈடுபட வைக்கிறது.
மேலும் செல்பி எடுப்பது என்பது ஒரு உளவியல் பிரச்சினை என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இந்நிலையில் லெபனானில் உள்ள மயானம் ஒன்றில் காவலாளியாக பணி புரிந்து வரும் டெப் சாய்ஃலி (Deab Saiqly) என்ற நபர், தனது தாயாரின் பிணத்துடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வெளியாக பலரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
அதிலும் பல ஆண்டுகளுக்கு முன்னரே காலமான அவரது தாயாரின் பிணத்தை தோண்டி எடுத்து, அதனுடன் அவர் செல்பி எடுத்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றில் மனநல மருத்துவரிடம் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, எனக்கு அமெரிக்காவில் வரன் ஒன்று அமைந்தது. ஆனால் மரணங்கள் எனக்கு விருப்பமான ஒன்றாக இருப்பதால் அதனை நான் நிராகரித்தேன் என கூறியுள்ளார்.
மேலும் இதுவரை நான் நிறைய சடலங்களுடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளேன் என்றும் ஆனால் தாயாருடன் எடுத்துக் கொண்ட செல்பியை மட்டும் பாதுகாப்பாக வைத்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்வையாளர்கள் டெப்பிற்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என கூறியபோதும், அவ்வாறு எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை என அவரை பேட்டி எடுத்த மனநல மருத்துவர் கூறியுள்ளார்.