வவுனியா மாவட்ட ரீதியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் கலைமகள் முன்பள்ளி முதலிடம்!!

279

வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு பாலர் பாடசாலை மழலைகளுக்கிடையே நடாத்திய விளையாட்டு போட்டியில் வவுனியா கலைமகள் முன்பள்ளி மாவட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தது.

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 23.11.2014 அன்று கலைமகள் விளையாட்டு கழக செயலாளர் திரு.காந்தி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா, முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர் திரு.சிவபாலன், வவுனியா நகர இலங்கை வங்கி முகாமையாளர் றோய் ஜெயக்குமார், வைத்தியர் சத்தியநாதன் மற்றும் கலைமகள் சங்க தலைவர் திரு.செல்வராசா, கழக பொருளாளர், ஆசிரியர், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

1 2 3 4