சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL போட்டிகளில் இருந்து நீக்கம் : உச்சநீதிமன்றம் அதிரடி!!

276

chennai

ஐ.பி.எல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை உடனடியாக நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஷேர் ஹோல்டிங் பற்றிய விவரங்களை தருமாறும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கட்டுப்படுத்துவது யார் என்ற விவரத்தை தெரிவிக்குமாறும் சீனிவாசனை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய அணியின் அணித்தலைவராக உள்ளவர் பி.சி.சி.ஐ. தலைவருக்கு சொந்தமான நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பது பற்றியும் சரமாரி கேள்வியெழுப்பியுள்ளது.

ஐ.பி.எல். உருவாக்கியுள்ள விதிப்படி, மேட்ச் பிக்சிங் மற்றும் பெட்டிங்கில் எந்த அணியாவது ஈடுபடுமானால் அதன் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.