யாழில் மீனவரின் வலையில் சிக்கிய ஏ.கே47!!

360

ak

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில், ஏ.கே 47 ரக துப்பாக்கியொன்று சிக்கியுள்ளது.

வியாபாரிமூலை பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை செல்வராசா என்ற மீனவரின் வலையிலே இந்த துப்பாக்கி சிக்கியுள்ளது.

இது தொடர்பில், பருத்தித்துறை பொலிஸில் தகவல் வழங்கிய மேற்படி மீனவர், வலையில் சிக்கிய துப்பாக்கியையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.