8 வயது மாணவனை பாலியல் வல்லுறவு செய்த அதிபருக்கு தர்ம அடி!!

295

abus

8 வயது பாடசாலை சிறுவன் மீது பாலியல் வல்லுறவு புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஊவாபரணகம – பம்பரபன பிரதேச பாடசாலை அதிபர் ஒருவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு கடுமையாக தாக்கி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பாடசாலையில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாடசாலை முடிந்ததும் மாணவனை வீட்டுக்குச் அழைத்துச் செல்லும் அதிபர் தொடர்ச்சியாக வல்லுறவு புரிந்து வந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றுமொரு சிறுவன் மூலம் தகவலை வெளியில் சொல்லியதோடு பின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பெற்றோர் நேற்றைய தினம் பாடசாலை முடியும்வரை நடப்பது என்ன என்பதை மறைந்திருந்து அவதானித்துள்ளனர். பாடசாலை முடிந்ததும் அதிபர் மாணவனை வழமைபோல் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அதிபரை பின் தொடர்ந்த பெற்றோர் மாணவன் மீது வல்லுறவு இடம்பெறப்போவதை சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கொண்டு வீட்டுக்குள் புகுந்து அதிபரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான அதிபர் ஊவாபரணகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவன் வெலிமட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.