வவுனியாவில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய திருடன் பொலிஸாரால் கைது!!

283


வவுனியா நகரில் தோணிக்கல், தாண்டிக்குளம், யேசுபுரம், வெளிக்குளம் ஆகிய இடங்களில் பல வீடுகளில் திருட்டுக்களில் ஈடுபட்ட திருடன் பொலிசாருக்கு கிடைக்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி குற்றப்புலனாய்வு பிரிவு எ.டி.பி.ஜெயதிலக தலமையிலான 7 பேர் கொண்ட குழுவினரால் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டான்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களும், கைபேசிகள்,மடிகணனி,பணம் போன்றன கைப்பற்றப்பட்டது.



கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வயது 42 எனவும் திருகோணமலை, மன்னார், வவுனியா ஆகிய பிரதேசங்களில் வெவ்வேறு பெயர்களில் நடமாடி திருட்டுக்களில் ஈடுபட்டுள்ளார். நாட்டின் பல பிரதேசங்களில் இந்நபர் மேல் பல வழக்குகள் இருப்பதுடன் இந்நபர் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக தொழில் புரிவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். மேலதிக விசாரணையை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளார்கள்.

1 2