நாட்டில் மழையுடனான காலநிலை தொடரும்!!

303


rain

நாட்டின் பல பாகங்களிலும் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.



நாட்டின் பல பாகங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டிலும் சூழவுள்ள கடல் பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.



மேல், வடமத்திய, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதேவேளை, மழை காரணமாக சில நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் வான்கதவுகள் திறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.