வெடி மருந்துகளுடன் பயணித்த மூவர் யாழில் கைது!!

294

vedi

அதி உயர் சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை வைத்திருந்த மூன்று நபர்களை கைதுசெய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த இவர்கள் யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதற்காக முச்சக்கர வண்டியில் வைத்து குறித்த வெடி மருந்துகளைக் கொண்டு வந்துள்ளனர்.

இந்தநிலையில் கச்சேரிக்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்த சந்தேகநபர்களை, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையிலான புலனாய்வாளர்கள் கைதுசெய்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த வூபர் செட்டிற்குள் இருந்து, 130 கிராம் நிறையுடைய 286 வெடி மருந்து கம்பிகள் மற்றும் 6 செட் வயர்கள், உள்ளிட்ட பல்வேறு வெடி மருந்து வகைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் தற்போது, பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.