வவுனியா இந்துக்கல்லூரி ஆசிரியர் திருமதி.சிவகுமார் செல்வமலர் அவர்களுக்கு “ஆசிரியர் பிரதீபா பிரபா” விருது!!

329

tea

சிறந்த சேவையாற்றிய ஆசிரியர்களை கௌரவிக்குமுகமாக வருடந்தோறும் ஜனாதிபதியால் வழங்கப்படும் “ஆசிரியர் பிரதீபா பிரபா” விருது வழங்கும் வைபவம் கடந்த 06.10.2014ம் திகதியன்று கொழும்பு தேசிய கல்வி நிறுவக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றபோது.

இதன் போது வவுனியா இந்துக்கல்லூரி ஆசிரியர் திருமதி.சிவகுமார் செல்வமலர் அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடமிருந்து சிறந்த ஆசிரியருக்கான “ஆசிரியர் பிரதீபா பிரபா” என்ற விருதைப் பெற்றுக் கொண்டார்.