தந்தையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த மகன்!!

297

father killer

பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது தந்தையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த நாதன் (27) என்ற இளைஞர் தனது தந்தை ரொபின்சனை (48) துண்டு துண்டாக வெட்டி உறுப்புகளை தொலைக்காட்சி ஸ்டாண்டாக உபயோகப்படுத்தியுள்ளார்.

இவர்கள் இருவரும் தங்கள் குடியிருப்பு கட்டடத்தில் ஒன்றாக தான் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்குமிடையில் நடந்த மோதலில் இவ்வாறு கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

முதலில் தனது தந்தையை கொலை செய்யவில்லை மறுத்து வந்தாலும், தற்போது ஒப்புக் கொண்டுள்ளதை அடுத்து இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.