வவுனியாவில் மாற்றுதிறனாளிகள் தினம் அனுஸ்டிப்பு!!

251

வவுனியா மாவட்ட செயலகம், மாவட்ட சமூகசேவை அலுவலகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு வவுனியாவில் நேற்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசனம் ஒதுக்கும் நடவடிக்கைகளுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. பின்னர் அங்கிருந்து ஊர்வலம் வவுனியா நகரசபை மண்டபம் வரை சென்றது. அங்கு மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்வுகளும் விழிப்புணர்வு கருத்தரங்கும் நடைபெற்றன.

வவுனியா மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் சரஸ்வதி மோகநாதன், வடமாகாண சமூகசேவைகள் திணைக்களப் பணிப்பாளர் நளாயினி இன்பராஜ் மற்றும் மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

h1 h2 h3