வவுனியா கணேஷா முன்பள்ளியில் நடைபெற்ற ஒளி விழாவும் சிறார்களின் பிரியாவிடை நிகழ்வும்!!

302

வவுனியா எல்லப்பர்மருதங்குளம் கணேஷா முன்பள்ளியில் ஒளி விழாவும் முன்பள்ளி சிறார்களின் பிரியாவிடை நிகழ்வும் நேற்று (04.12) வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் முன்பள்ளி ஆசிரியர் திருமதி.செல்வராணி தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதவும் கோயில்குளம் இளைஞர் கழக இஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் கௌரவ விருந்தினர்களாக தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் திரு.ராஜசேகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.அருள்குமார், குடும்ப நல உத்தியோகத்தர் திருமதி.பிரவீனா ஆகியோரும் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்சிகளும், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

IMG_4628 IMG_4632 IMG_4638 IMG_4652 IMG_4674 IMG_4686 IMG_4709 IMG_4721 IMG_4724 IMG_4733 IMG_4745