வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் கௌரவிப்பு!!(படங்கள் )

440

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இந்த ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று 06.12.2014 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் மைதிலி தயாபரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்களும் கேடயங்களும் வழங்கிவைத்தார். மேற்படி நிகழ்வில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

-பண்டிதர்-

1 02 204 4