இந்துக் கடவுள் சிவபெருமானின் பெயரில் நடந்த சூதாட்டம் : இந்துக்கள் கடும் எதிர்ப்பு!!

271

sivan

ஜேர்மனியில் உள்ள சூதாட்ட விடுதியில் சிவபெருமான் பெயரால் சூதாட்டம் நடத்தப்பட்டதால் அப்பகுதி இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியின் எஸ்பல்காம்ப் என்ற நகரில் உள்ள சூதாட்ட விடுதியில் உள்ள சூதாட்ட இயந்திரங்களில் சிவபெருமான் படம் பொறிக்கப்பட்டு இருந்துள்ளது. இதை அறிந்து அப்பகுதியில் உள்ள இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து இந்துக்களின் இந்த எதிர்ப்புக்கு கிறிஸ்தவர்களும், யூதர்களும், புத்த மதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா நவேதாவில் உள்ள ஐக்கிய கிறிஸ்தவ தேவாலயதின் மறைதிரு. ரிச்சட் எல்.ஸ்மித் இந்துக்களின் எதிர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து கூறுகையில், சூதாட்ட இயந்திரங்களில் சிவபெருமான் படம் பொறிக்கப்பட்டது தங்கள் மத உணர்வை பாதிப்பதாக உள்ளதென இந்துக்கள் தெரிவித்துள்ள எதிர்ப்புக்கு நான் ஆதரவளிக்கிறேன்.

இவ்வாறு இந்து கடவுளின் பெயரையோ, படத்தையோ சூதாட்டத்தில் பயன்படுத்துவது பொருத்தமற்ற செயல். எனவே, இந்த சூதாட்ட விடுதியினர் இந்த போக்கை கைவிட்டு வேறு வகையில் தங்கள் தொழிலை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.