வவுனியா யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் உறுபினர்களான அமரர்கள் சாந்தன், யூட்கஜன் ஞாபகார்த்தமாக 13ம் வருடமாக மின்னொளியில் நடத்தப்படும் உதைபந்தாட்ட ஆரம்ப நிகழ்வு வவுனியா வைரவபுளியங்குளம் யங் ஸ்டார் விளையாட்டு கழக மண்டபத்தில் தலைவர் ராஜன் தலைமையில் உணர்வு பூர்வமாக இடம் பெற்றது.
அமரர்கள் சாந்தன், யூட்கஜன் ஞாபகார்த்தமாக 13ம் வருடமாக நடத்தப்படும் உதைபந்தாட்டபோட்டிகள் இந்த முறை யங் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் 20ம் ஆண்டு நிறைவாக வருவது குறிப்பிட தக்கது.
வருடாவருடம் அமரர்கள் சாந்தன், யூட்கஜன் இருவரினதும் படங்களுக்கு முன்னால் மெழுகுதிரி ஏற்றி உணர்வு பூர்வமாக ஆரம்பிக்கும் இந்த நிகழ்வில் இம் முறை மெழுகுதிரிகளை யங் ஸ்டார் விளையாட்டு கழக ஸ்தாபகர்களும் ஆரம்பகால உறுபினர்களுமான அமலன் , சந்திரகுமார் (கண்ணன்) ஸ்ரீசங்கர் (பாபு ), ஜீவராஜ்(ஜீவன்), விஜயகுமார் (விஜயன்), ஜீவகுமார் (ஜீவன்), சுந்தரடாசன்(சுந்தர் ) ஆகியோர்களுடன்
விளையாட்டு கழக தலைவர் ராஜன் , செயலாளர் ஆனன், பொருளாளர் தீபன் , உறுபினர்களான நாகராஜன், மயூரன் இவர்களுடன் கோபால், சனா, கீதன், துசி, முகுந்தன், சொரூபன், கமலன் இவர்களுடன் விளையாட்டு கழக வீரர்களும் உறுபினர்களும் ஏற்றி வைத்து போட்டியை ஆரம்பித்து வைத்தனர்
முதல் போட்டியாக யங் ஸ்டார் விளையாட்டு கழகத்துக்கும் அல் இக்பால் விளையாட்டு கழகத்துக்கும் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் யங் ஸ்டார் விளையாட்டு கழகம் 4-2 என்ற கோல் அடிப்படையில் வென்று வெற்றியுடன் போட்டியை தொடங்கியது .