வவுனியாவில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!!

316

ja

காணாமற் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழு இன்று 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை வவுனியா மாவட்டத்தில் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளதாக ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.ஹெலி தெரிவித்துள்ளார்.

செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் இன்றும் நாளையும் காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு சாட்சியங்களை பதிவு செய்யும். 16,17 ஆம் திகதிகளில் வவுனியா பிரதேச செயலகத்தில் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.