வவுனியாவில் 1125 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!!

315

vote

ஜனாதிபதி தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கப்பட்ட 1125 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிதெரிவித்தார்.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 4290 விண்ணப்பங்களில் 1125 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் முழுமை பெறாமல் காணப்படுவதனால் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஏற்றுக்கொள்ளப்பட்ட 3165 வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவத்தாட்சி அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.