வவுனியாவில் மீண்டும் திருடர்களின் அட்டகாசம்: முகமூடி வாள்கள் சகிதம் கைவரிசை : பொதுமக்களே அவதானம்!!

315

thef

வவுனியாவில் கடந்த சிலதினங்களாக திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர். வவுனியா கோவில்குளம் , தெற்கிலுப்பை குளம் ஆகிய இடங்களில் திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.

முகமூடி அணிந்து வாள்கள், பொல்லுகள் சகிதம் கதவை உடைத்து உள்நுழையும் ஆறுக்கு மேற்பட்ட கொள்ளையர்கள் வீட்டிலிருதவர்களை கட்டி வைத்துவிட்டு பணம் நகைகள் என்பவற்றை சூறையாடி சென்ற மூன்று சம்பவங்கள் இதுவரை கடந்த வாரத்தில் இடம்பெற்றுள்ளன.

பயங்கர கூரிய ஆயுதங்களுடனே இக்கொள்ளையர் குழு தமது கைவரிசையை காட்டியுள்ளனர். மேற்படி சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர். மேற்படி கொள்ளையர் குழு தொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.