வவுனியாவில் வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசாவின் நிதி ஒதுக்கீட்டில் ஆலயங்கள் புனரமைப்பு!!

280

வட மாகான சபை உறுப்பினர் இ.இந்திரராஜா அவர்கள் 2014ம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து 650000 ரூபாவினை ஆலயங்களின் புனரமைப்பு மற்றும் பொருட்கள் கொள்வனவிற்காக ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந் நிதியில் இருந்து ஒரு தொகுதி ஆலயங்களிற்கான காசோலைகள் 29.11.2014 அன்று வவுனியா பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கௌரவ மாகாண சபை உறுப்பினர் திரு. இ.இந்திரராசா அவர்களால் ஆலய நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டன.
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு காசோலைகள் வழங்கப்படாத ஆலயங்களிற்கு விரைவாக வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

SAM_3238 SAM_3249 SAM_3253 SAM_3261