தாயும் மகளும் கிணற்றில் விழுந்து தற்கொலை!!

324


kinaru

தாய் ஒருவர் தனது மகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.



காலி மாவட்டத்தில் பிட்டிகல – வத்தஹேன பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 36 வயது தாயும் 10 வயது மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தனது 16 வயது மூத்த மகளுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து மூத்த மகள் விஷம் அருந்தியுள்ளார்.



இதனை அறிந்த தாய் தனது இரண்டாவது மகளுடன் சேர்ந்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விஷம் அருந்திய மூத்த மகள் தற்போது அல்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.



இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.