கண்டியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடுகதி ரயில்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி எல்.ஏ.ஆர் ரத்னாயக்க தெரிவித்தார்.
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அதிகாலை 3.55 க்கு கண்டியிலிருந்தும், ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்தும் இந்த ரயில் தனது பயணத்தை ஆரம்பிக்கும்.
பயணிகளின் தேவையை கவனத்தில் கொண்டு பாடசாலை விடுமுறை காலம் நிறைவடைந்ததன் பின்னரும் இந்த சேவையை நடத்துவதற்கு ஆராய்வதாகவும் எல்.ஏ.ஆர் ரத்னாயக்க தெரிவித்தார்.