வவுனியாவில் மூதாட்டி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை!!

275

வவுனியா தவசிகுளம் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த நிலையில் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்..

வவுனியா, தவசிகுளம், 6ம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த கமலாதேவி (69) கடந்த சில நாட்களாக உடல் சுகயீனத்தால் அவதிப்பட்டதாகவும், நேற்றைய தினம் படுக்கப் போவதற்கு முன் வீட்டில் உள்ளவர்களிடம் என்னால் வருத்தம் தாங்க முடியவில்லை கிணற்றில் விழுந்தாவது உயிரை விடுவேன் எனத் தெரிவித்ததாகவும் காலையில் தேனீர் கொடுப்பதற்காக மூதாட்டியை தேடிய போது அவர் கிணற்றில் சடலமாக கண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

1 2