உத்திரபிரதேசத்தில் வீட்டுப்பாடம் செய்யாத 7 வயது மாணவனை ஆசிரியர் அடித்ததில் அந்த மாணவன் உயிரிழந்துள்ளான்.
உத்திரபிரதேசம் பேரலியில் உள்ள நர்சிங் பள்ளி ஒன்றில் அராஜ் என்ற 7 வயது சிறுவன் படித்து வருகிறான். சம்பவத்தன்று வீட்டுப்பாடம் எழுதி வராததால் கோபம் அடைந்த அவனது ஆசிரியர், சுவற்றில் மாணவனின் தலையை மோதியுள்ளார். இதில் காயம் அடைந்த மாணவனின் மூக்கில் இருந்து ரத்தம் வழியத்தொடங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உங்கள் மாணவனை அழைத்துச்செல்லுங்கள் என்று அராஜின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அராஜின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது நினைவு இழந்த நிலையில் இருந்த் அராஜ் சிறிது நேரத்தில் உயிரிழந்தான்.
தலையில் அடிபட்ட பலத்த காயத்தால் அராஜ் உயிரிழந்ததாக பிரதே பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அராஜின் சொந்த ஊரான நான்கரா கிராம மக்கள் பள்ளி முதல்வரை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி பொலிஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி மேலாளர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.