வவுனியா கோவில்குளத்தில் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் அட்டகாசம் : வீட்டில் இருந்தவர்களை தாக்கி விட்டு பணம் நகைகள் கொள்ளை!!

335

kollai

வவுனியாவில் கடந்த சிலதினங்களாக திருடர்கள் தமது கைவரிசையை காட்டிவருகின்றனர். இன்று (20.12) அதிகாலையில் வவுனியா கோவில்குளம் ஒன்பதாம் ஒழுங்கைப் பகுதியில் இரண்டு வீடுகளில் கூரிய ஆயுதங்களுடன் வீட்டு கதவுகளை உடைத்து உள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிருந்தவர்களை சரமாரியாக தாக்கிவிட்டுபணம் மற்றும் பெருந்தொகையிலான நகைகள் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

மேற்படி இரண்டு வீடுகளும் ஒன்பதாம் ஒழுங்கையில் இருந்து சற்று ஒதுக்கு புறமாக அமைந்துள்ளமையோடு நேற்று கடும் மழையும் பெய்து கொண்டிருந்தமையாலும் அயலவர்கள் இதுதொடர்பாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இதேபோன்று கடந்த வாரமும் வவுனியா கோவில்குளம், தெற்கிலுப்பைகுளம் ஆகிய இடங்களில் திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர். முகமூடி அணிந்து வாள்கள் பொல்லுகள் சகிதம் கதவை உடைத்து உள்நுழையும் ஆறுக்கு மேற்பட்ட கொள்ளையர்கள் வீட்டிலிருதவர்களை கட்டி வைத்துவிட்டு பணம் நகைகள் என்பவற்றை சூறையாடி சென்ற மூன்று சம்பவங்கள் இதுவரை கடந்த வாரத்தில் இடம்பெற்றுள்ளன.

பயங்கர கூரிய ஆயுதங்களுடனே இக் கொள்ளையர் குழு தமது கைவரிசையை காட்டியுள்ளனர். மேற்படி சம்பவங்கள் தொடர்பாக பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர் .மேற்படி கொள்ளையர் குழு தொடர்பாக பொதுமக்களே மிகவும் அவதானமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

-பண்டிதர்-