வவுனியாவில் கடும் மழை : மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

366

வவுனியாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக செட்டிகுளத்திலுள்ள மீடியாபாம், கந்தசாமி நகர், பாவற்குளம் படிவம் நான்கு மற்றும் மெனிக்பாம் ஆகிய பகுதி மக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செட்டிகுளம் – பூவரசன்குளம் ஊடான போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்றும், நேற்று முன்தினமும் பெய்த கடும் மழை காரணமாக தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் அதிகரித்திருக்கிறது.
இதனால் செட்டிகுளம் – பூவரசன்குளம் போக்குவரத்து பாதை தடைப்பட்டது.

இதேபோன்று நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியும் வெள்ளத்தால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பித்தடைந்திருக்கும் அதேவேளை பாவற்குளத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தொடர்ந்தும் மழை பெய்தால் அதன் வான் கதவுகள் திறக்கப்படலாம் என்று வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் சூரியராஜா கூறியுள்ளார்.

v v1 v3