வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாய்வுக் கூட்டம்!!

288


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பிரதிநிதிகளின் கருத்தறிதல் கூட்டமொன்று இன்று ஞாயிறு முற்பகல் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

வடகிழக்கு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற கருத்தறியும் கூட்டத்தின் தொடர்ச்சியாகவே வவுனியா மாவட்டத்தில் இன்று இக்கூட்டம் நடைபெற்றுள்ளது.



இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உட்பட மாகாணசபை உறுப்பினர்களும், பிரதேசசபைத் தலைவர்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவிருக்கும் தீர்மானம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டு அவர்களின் கருத்துக்களும் அறியப்பட்டது.



அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் கூடி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஒரு முடிவினை எடுப்பது என்றும் தெரிவிக்கப்பட்டது.



V1 V2 V3