வவுனியா மாவட்டத்தில் 15 வாக்கெண்ணும் நிலையங்கள்!!

315


Election

எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது வவுனியா மாவட்ட செயலகத்தில் 15 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.



முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 வாக்கெண்ணும் நிலையங்கள் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ளன. மன்னார் மாவட்டத்தின் செயலக வளவினுள் 6 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இதேவேளை மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் அஞ்சல் மூலம் அளிக்கப்படும் வாக்குகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் வைத்து எண்ணப்படும் என வடமாகாண பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் ஏ.ஒ.எம். நபீல் தெரிவித்தார்.