யாழில் பெண்ணொருவர் மீது வாள் வெட்டு!!

816

valvedu

யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த நிஷாந்தினி (24) என்பவரே வாள் வெட்டுக்கு இலக்காகி உள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் இவர், இன்று காலை கடமைக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

இவ்வாறு சென்றவரை யாழ். நகர்ப்பகுதியில் வைத்து வாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். படுகாயமடைந்தவர் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

படுகாயமடைந்த பெண் திருமணம் செய்து கடந்த 5 வருடங்களாக கணவனைப் பிரிந்து வாழ்கின்றார். குடும்பத்தகராற்றின் காரணமாகவே வாள்வெட்டு ஏற்பட்டதாக தெரிவித்தனர். மேலும் அப்பெண்ணின் கணவனே வாளால் வெட்டிக்காயப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.