வவுனியாவில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

347

வவுனியாவில் தொடர் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக இயல்பு வாழ்கை பாதிப்படைந்துள்ளதுடன் போக்குவரத்துப் பாதைகளும் தடைப்பட்டுள்ளது.

பூவரசன்குளம் – செட்டிகுளம் வீதி, நெளுக்குளம் – செட்டிகுளம் வீதி என்பன வாகனப் போக்குவரத்து செய்யமுடியாதாவாறு வீதியை ஊடறுத்து மழை நீர் பாய்கின்றது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன.

பாவற்குளத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன இதனால் இதன் காரணமாக கந்தசாமி நகர், மீடியாபாம், கன்னாட்டி உள்ளிட்ட மக்கள் தமது வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். நெளுக்குளம் – செட்டிகுளம், பூவரசன் குளம் – செட்டிகுளம் போக்குவரத்து பாதையும் முழுமையாக தடைப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கடும் மழையால் 373 குடும்பங்களைச் சேர்ந்த 1444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

10 11 12 14 15 16