வவுனியாவில் நடைபெற்ற பேராசிரியர் க.கைலாசபதியின் 32ம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கு!!

603


பேராசிரியர் க.கைலாசபதியின் 32ம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கு நேற்று (21.12) வவுனியா அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் மாலை 3 மணியளவில் நடைபெற்றது.

வவுனியா மாவட்ட தேசிய கலை இலக்கியப் பேரவை ஏற்பாடு செய்த இன் நிகழ்வு வவுனியா கல்வியல் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.ந.பார்த்தீபன் தலைமையில் இடம்பெற்றது.



பேராசிரியர் க.கைலாசபதி தொடர்பான கருத்துரையை வவுனியா இந்துக் கல்லூரி ஆசிரியை திருமதி கங்கைவேணி அமிர்தலிங்கம் அவர்களும், தொடருரையை எழுத்தாளர் தமிழ்மணி கே.கே.அருந்தவராஜா (மேழிக்குமரன்) அவர்கள் நிகழ்த்தியதுடன் நன்றியுரையை திரு.சு.டொன் போஸ்கோ (செயலாளர் – வவுனியா மாவட்ட தேசிய கலை இலக்கியப் பேரவை) நிகழ்த்தினார்.

“நீர்வளம் காப்போம்” என்ற தொனிப்பொருளில் வில்லுப்பாட்டு நிகழ்வும் நடைபெற்றதுடன். இன் நிகழ்வுகளில் நூற்றுக் கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர்.



01 02 03 04 06 07