நடுரோட்டில் பெண்ணுக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை செய்யப்பட்ட கொடூரம்!!

325


சிரியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி நடுரோட்டில் வைத்து பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரியாவில் இயங்கி வரும் ஜபத் அல் நுஸ்ரா என்ற இயக்கத்தினரே இக்கொடூர தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

அல்கொய்தாவுடன் சேர்ந்து குறித்த இயக்கம் பணியாற்றி வருகிறது. இவர்கள் நடுரோட்டில் பெண் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.



அந்த வீடியோவில், பர்தா அணிந்த பெண் ஒருவர் சாலையில் மண்டியிட்டு கைகளை பின்னால் கட்டிக் கொள்கிறார். இந்த பெண்ணை சுற்றி துப்பாக்கி ஏந்திய ஜிகாதிகள் சூழ்ந்து கொள்கின்றனர், இவர்களில் ஒருவர் கூடியிருந்த மக்களை நோக்கி “கணவருக்கு துரோகம் செய்து விட்டார், விபச்சாரத்தில் ஈடுபட்டார்” என்று கூறியபடியே தனது துப்பாக்கியால் அப்பெண்ணின் தலையை நோக்கி சுடுகிறார்.

நடுரோட்டில் பெண் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட இக்கொடூர தண்டனைக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.



1 2 3