வவுனியா வெங்கலச்செட்டிகுளம் காலாச்சார அபிவிருத்தி பேரவையினால் செல்வன் எஸ்.முஹமட் சர்ஜானின் இருட்டரை மெழுகுவர்த்தி கவிதைத் தொகுப்பின் அறிமுக விழா கடந்த 19.01.2015 திங்கட் கிழமை பி.ப 2.00 மணிக்கு இடம் பெற்றது.
இந்நிகழ்வு பேரவையின் தலைவரும் பிரதேச செயலாளருமான திரு நா.கமலதாசன் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர் திரு அந்தோனி ஐயா கலந்து கொண்டதுடன் கௌரவ விருந்தினராக செட்டிகுளம் மத்தியஸ்தர் சபையின் தவிசாளரும் சூடுவெந்தபுலவு அல் இக்பால் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் (கவியாசகன்) சேகு ராஜிது கலந்து கொண்டதுடன் சிறப்புவிருந்தினர்களாக பிரதேச சபையின் எதிர் கட்சித்தலைவர் ஏ.எஸ்.எம்.சரூக் மற்றும் பிரதேசசபை உருப்பினர்களான முஸ்தபா ஸாஜிதீன், ஜெகதீஸ்வரன் செட்டிகுளம் மக்கள் வங்கி முகாமையாளர் ஏ.எச்.எம் அரூஸ் மற்றும் புரட்சிக் கவிஞர் மானிக்கம் ஜெகன் மற்றும் கலைஞரகள், இலக்கிய ஆர்வளர்கள், பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந் நூல் செட்குளம் பிரதேசத்தில் இஸ்லாமியர் ஒருவரால் வெளியிடப்படும் முதலாவது கவிதைத் தொகுப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.