வவுனியா மாவட்ட விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சின் உழவர் விழா இன்று 25. 01.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
வட மாகாண விவசாய கால்நடை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வட மாகாணத்தில் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பில் சிறந்து விளங்குபவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தது.
இதில் சிறந்த வீட்டுத்தோட்ட பயனாளிகள், கால்நடை, கோழிவளர்ப்பு போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு மாலை மரியாதையும் சான்றிதழ், பணப்பரிசில்களும் வழங்கி வைக்கபட்டன.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், கௌரவ விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உட்பட திணைக்களத் தலைவர்கள் மற்றும் வவுனியா மாவட்டத்தில் விவசாய கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட அலுவலகங்கள், சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
படங்கள் – கஜன்