வவுனியா மகாறம்பைக்குளம் வீட்டுத்திட்டத்தில் தாய் சேய் நிலைய அடிக்கல் நாட்டு விழா!!

333

வவுனியா மகாறம்பைக்குளம் வீட்டுத்திட்டத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள தாய் சேய் நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று 28.01.2015 காலை 12 மணியளவில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா, வவுனியா மாவட்ட வைத்திய அதிகாரி லவன், மகாறம்பைக்குளம் பொலிஸ் தலைமை அதிகாரி ரணசிங்க மற்றும் கிராம உத்தியோகத்தர் கனகவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதற்கட்ட நிதியாக மகாறம்பைக்குளம் வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த திரு.பிள்ளைநாயகம் 100,000 ரூபாவினையும், வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த அன்ரன் 50,000 ரூபாவினையும் கிராம அபிவித்திச் சங்கத்திடம் கையளித்தனர்.

-மதுஜன்-

11 12 13 14 15 16 171819202122