பாடசாலை விடுதியில் குழந்தை பெற்றெடுத்த பத்தாம் வகுப்பு மாணவி!!

708

Baby

ஒடிசா மாநிலத்தில் விடுதியில் தங்கிப்படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் உள்ள லிங்ககடா உறைவிடப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்த அந்த மாணவி, அதே வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது அறையில் அந்தப் பெண் பிரசவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அலட்சியப்போக்கின் காரணமாக பள்ளியின் தலைமையாசிரியை, இரு ஒப்பந்த ஆசிரியைகள், பள்ளி மருந்தக செவிலியர் ஆகியோரை பணி நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.