முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை விலக்குவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழு இறுதியில் அவரை விலக்குமாறு உரிய பரிந்துரையை செய்யவில்லை. எனவே அன்று இடம்பெற்ற. தவறு காரணமாக ஷிராணி பண்டாரநாயக்க கடந்த வியாழக்கிழமை தனது கடமைகளை மீண்டும் பொறுப்பேற்றார் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
இந்நிலையில் ஷிராணி பண்டாரநாயக்கவும் பதவி விலகிவிட்டார். தற்போது அடுத்த சிரேஷ்ட தரத்தில் இருக்கும் நீதியரசர் ஸ்ரீபவன் பிரதம நீதியரசராக நியமிக்கப்படுவார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை விலக்குவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழு இறுதியில் அவரை விலக்குமாறு உரிய பரிந்துரையை செய்யவில்லை. மீண்டும் ஒரு குழுவை நியமிக்குமாறே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எனவே அன்று இடம்பெற்ற தவறு காரணமாக ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி விலக்கியமை சட்டபூர்வமாக கருதப்பட முடியாது. எனவேதான் அவர் கடந்த வியாழக்கிழமை தனது கடமைகளை மீண்டும் பொறுப்பேற்றார். எனவே அவரை பதவி விலக்கியமை சட்டபூர்வமானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2013 ஆம் ஆண்டு செய்யப்பட்ட புதிய பிரதம நீதியரசர் நியமனமும் சட்டபூர்வமானதல்ல.
எவ்வாறெனினும் ஷிராணி பண்டாரநாயக்கவும் பதவி விலகிவிட்டார். தற்போது அடுத்த சிரேஷ்ட தரத்தில் இருக்கும் நீதியரசர் ஸ்ரீபவன் பிரதம நீதியரசராக நியமிக்கப்படுவார். அன்று முன்னாள் ஜனாதிபதியிடம் மொஹான் பீரிஸை பிரதம நீதியரசராக நியமிக்கவேண்டாம் என்று நான் கூறினேன். ஆனால் அதனை கேட்காமல் அந்த நியமனம் செய்யப்பட்டது.
இதேவேளை, மொ ஹான் பீரிஸ் ஜனாதிபதி மைத்திரிபாலவை தொடர்பு கொண்டு தான் புதிய நிலைக்கு ஏற்ப செயற்படுவதாகவும் தன்னை பதவி விலக்
கவேண்டாம் என்றும் கேட்டுள்ளார்.
அதனை கேட்ட ஜனாதிபதியும் பிரதமரும் சிரித்துள்ளனர். இதுதான் உண்மை நிலை மையாகும் என்றார்.