7 வயது சிறுமியை கடுமையான முறையில் துஷ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞன் கைது!!

298

Abuse

ஏழு வயது சிறுமியை கடுமையான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 19 வயதுடைய மீனவர் ஒருவரைக் கல்பிட்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நேற்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனியாக சிறுமி வீட்டில் இருந்த போது அங்கு வந்த சந்தேகநபர் இந்த குற்றத்தை இழைத்துவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தனக்கு நேர்ந்த கொடுமையை தனது மூத்த சகோதரி வீட்டுக்கு வந்ததும் சிறுமி கூறியுள்ளார். இதனை அடுத்து தாய்க்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

மேலும் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் சிறுமியின் அயல்வீட்டுக்காரர் எனத் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் சிகிச்சைகளுக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.