வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்துக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் இரு மாணவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில்!!

325

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்துக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் அந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.

இந்த விபத்து இன்று நண்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது. பாடசாலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஏ9 வீதிக்கு சென்ற மாணவர்களை கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பஸ் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 2016 ஆண்டு உயர்தர விஞ்ஞானப்பிரிவில் பயிலும் கிருஷாந்தன், துதக்‌ஷன் ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

V2V1