தைவானில் விமானம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 19 பேர் பலி!!

257

Thiaivan

தைவான் நாட்டில் 53 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் 19 பேர் பலியானதாக தைவான் உள்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தைவான் நாட்டு செய்தி ஏஜென்சி குறிப்பிடுகையில், ஆற்றில் விழுந்த விமானத்தில் சிக்கியுள்ள பயணிகளின் நிலை தெரியவில்லை.

ஆனால் அதில் 16 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை உயிருடன் மீட்க வேண்டும் என்ற உறுதியுடன் பணிகளை தொடர்கிறோம் என தெரிவித்துள்ளது.

விமானம் விபத்துக்குள் சிக்கிய போது வானிலை சீராகவே இருந்துள்ளது, எனினும் இந்த விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது.