வவுனியா நொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி வித்தியாலயத்தின் அதிபர் திரு.குலேந்திரகுமார் தலைமையில் 25.02.2015 நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வித்தியாலயத்தின் பழைய மாணவியும், அரச சார்பற்ற நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகருமான திருமதி கிருஸ்ணகுமாரி, ஓமந்தை பங்குத்தந்தை லக்கோன் பிகறாடோ, உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் மங்களகுமார், உதவிக்கல்வி பணிப்பாளர் திருமதி சண்முகலிங்கம், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ரவிச்சந்திரன், வவுனியா மகாவித்தியாலய ஆசிரியரும், வித்தியாலயத்தின் பழைய மாணவியுமான திருமதி தர்மரட்ணம், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.