விபத்தில் பிரபல நடிகர் பரிதாப மரணம்!!

283

Act

திருவந்தரபுரத்தில் டெம்போ ஒன்று மோதி பிரபல மலையாள நடிகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருவனந்தபுரத்தை அடுத்த பத்தனம்திட்டா பாரிபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகன் சரத்குமார் (23).

ஏராளமான தொடர்களில் நடித்து பிரபலமாக திகழ்ந்த இவர் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது மினி டெம்போ மோதியதால், தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார்.

இவரை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அருகில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இவ்விபத்து பற்றி தகவல் அறிந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன்பின் திருவனந்தபுரத்தில் உள்ள தொலைக்காட்சி தொடர் நடிகர்கள் சங்க கட்டிடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை அவரது உடல் அடக்கம் நடந்தபோது அதில் ஏராளமான தொலைக்காட்சி நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர்.