வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கனகரட்ணம் விளையாட்டு மைதானத்தில் கல்லூரியின் அதிபர் செல்வி உமா இராசையா தலைமையில் 27.02.2015 வெள்ளிகிழமை நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராசா, கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராஜ், வவுனியா தெற்கு உதவிக்கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) திரு.ஜனாப் சுபைர், வவுனியா நகர கிராம சேவையாளர் திரு.ஜெகசோதிநாதன், ஓய்வுபெற்ற ஆசிரியை லூர்துமேரி யோகநாதன்,மாவட்ட சமுகசேவை உத்தியோகத்தரும், பாடசாலை அபிவிருத்திக்குழு தலைவருமான எஸ்.எஸ்.வாசன், பிரதிக்கல்வி பணிப்பாளர் (வவுனியா வடக்கு) வாகீசன், பாடசாலை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் திரு.சௌந்தரராஜன், சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் ஆரம்ப பாடசாலை பிரிவு அதிபர் திருமதி நந்தகோபால், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.