வடமேற்கு பாகிஸ்தானை 5.4 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி வெள்ளிக்கிழமை தாக்கியுள்ளது. கைபர் பகதுன்கவா மாகாணத்தில் மன்ஸெஹ்ரா நகரின் வடகிழக்கே 37 கிலோ மீற்றர் தொலைவில் 28.9 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்கிய இந்த பூமியதிர்ச்சியை தொடர்ந்து அந்தப் பிராந்தியத்தில் 3.2 ரிச்டர் மற்றும் 4 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சிகள் தாக்கியுள்ளன.
இந்த பூமியதிர்ச்சியானது தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் பாகிஸ்தானிய காஷ்மீர் உள்ளடங்கலான பிரதேசங்களில் உணரப்பட்டுள்ளது. மேற்படி பூமியதிர்ச்சியால் மன்ஸெஹ்ரா பிராந்தியத்தில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இரு வீடுகள் சேதமடைந்துள்ளன