முல்லைத்தீவில் நடைபெற்ற கவிதைப்பட்டறை!!(படங்கள்)

422

முல்லை மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் 26.2.2015 மற்றும் 27.2.2015 ஆகிய இரு தினங்களும் ”கவிதைப்பட்டறையும் கருத்தாடலும்” எனும் தலைப்பில் நிகழ்வொன்று நடைபெற்றது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலர் திரேஸ்குமார் அவர்களின் அனுமதியுடன் முல்லை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் செல்வி மதியரசி அவர்களின் ஒழுங்கமைப்பில் இக்கவிப்பட்டறை முல்லைத்தீபனால் நடாத்தப்பட்டது. முல்லைதாசன் உதவி புரிந்திருந்தார்.

மொழியின் தோற்றம் பற்றிய விளக்கத்துடன் ஆரம்பமாகி, கவிதை என்றால் என்ன? கவிதையின் வகைகள், வாசகர்களின் நிலை, முல்லைமாவட்டக் கவிதைகளின் தன்மை மற்றும் சமகாலத்தில் கவிதையின் தேவையும் தாக்கமும் எனும் தலைப்புக்களில் பட்டறை நடாத்தப்பட்டது.

கரைதுறைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளின் உயர்தர மாணவர்களில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

DSC07421 DSC07427 DSC07467 DSC07469