இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணிப் பொதுக் கூட்டம் நாளை(01.03) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
வவுனியா தாயகம் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இக் கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தின் தமிழரசுக்கட்சியின் இளைஞா் அணியினரை தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதே வேளை இளைஞா் அணியில் புதிதாக இணைந்து கொள்ள விரும்புபவா்களையும் இப் பொதுக் கூட்டத்திற்கு சமுகமளிக்குமாறு இளைஞா் அணியின் வவுனியா மாவட்ட செயலாளா் ஐ.யோகநாதன் கோரிக்கை விடுத்துள்ளாா்.