யாழில் இளைஞர்கள் இருவர்மீது வாள்வெட்டு!!

355

Vaal

சாவகச்சேரி, கெருடாவில் பகுதியில் இளைஞர்கள் இருவர் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதில் இருவரும் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு இடம்பெற்றது.

சம்பவத்தில் கெருடாவிலைச் சேர்ந்த செல்வராஜா ரவீந்திரன் (28), சிவகுமார் சோபன்(27) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர்.

சோபன் என்பவர் கெருடாவிலில் கடை நடத்திவருபவர் என்றும், இன்று இரவு கடையைப் பூட்டிவிட்டு நண்பருடன் வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் எதிரே மறைந்திருந்த குழுவினர் இவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டிப் படுகாயப்படுத்திவிட்டுத் தப்பிச்சென்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்டனர். விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.